
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கிண்ணியா,திருகோணமலை,தம்பலகாமம்,மூதூர் மற்றும் கந்தளாய் பகுதிகளிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.கடும் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நுளம்புப் பெருக்கமும் காணப்படுகிறது.மேலும் இம்மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவில் திணைக்களம் கூறுகின்றது.
-Kinniya Express News Team-
No comments:
Post a Comment