தங்க ஆபரணங்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குவைத்திலுள்ள ஹவாலி அபிவிருத்தி சந்தையில் வைத்து குறித்தப் பெண் தங்க ஆபரணத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கைப் பெண் திருட்டில் ஈடுபட்டதை சந்தைத் தொகுதியில் பொறிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்கள் பதிவு செய்ததை அடுத்து சந்தைத் தொகுதி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சந்தை உரிமையாளரிடம் தங்க ஆபரணங்களைக் காட்டுமாறு கூறிவிட்டு அதில் ஒரு ஆபரணத்தை எடுத்து குறித்த இலங்கைப் பெண் தனது உடலுக்குள் மறைத்துள்ள காட்சியை பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளது.
இதனை அடுத்து குறித்த இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டதுடன், பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் 12 திருட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதென குவைத் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment