Saturday, December 4, 2010

கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென படையெடுத்த பாம்புகள்:

கிண்ணியா கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென பாம்புகள் தோன்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை முதல் இப்பாம்புகள் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆயிரக்கணக்கான வெண்ணிறப் பாம்புகள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.இதே போன்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.இதனால் மீண்டும் மக்களிடையே சுனாமி அச்சம் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.அதேபோல் தோணா கடலிலும் இவ்வாறு பாம்புகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

-http://kinniyaexpress.com-

No comments:

Post a Comment

Followers