கிண்ணியாவில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதுடன் பல நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளது.மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கடல் மட்டம் சற்று உயர்ந்துள்ளதுடன் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்படுகின்றமையால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது.
04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-
No comments:
Post a Comment