குறிஞ்சாக்கேணி பொது நூலகத்திற்கு கடந்த இரு நாட்களாக பத்திரிகைகள் வழங்கப்படவில்லையென வாசகர்கள் அங்கலாய்க்கின்றனர்.கிண்ணியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் இந்நூலகம் கடந்த இரு நாட்களாக பத்திரிகைகள் இன்மையால் வாசகர்களின் வரவு குறைந்துள்ளது.இது தொடர்பாக குறிஞ்சாக்கேணி நூலகாரிடம் வினவியபோது இதற்கு முற்றிலும் பிரதேச சபையினரே பொறுப்பு.அவர்கள் பத்திரிகைகள் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வதற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பத்திரிகைகள் அத்தியவசியமானவை.எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உரிய அதிகாரிகளை வாசகர்களும்,மாணவர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.
10.12.2010
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை
No comments:
Post a Comment